Home ஏனையவை ஆன்மீகம் மடு மாதாவை வரவேற்கத் தயாராகி வரும் முல்லைத்தீவு மக்கள்

மடு மாதாவை வரவேற்கத் தயாராகி வரும் முல்லைத்தீவு மக்கள்

0

Courtesy: Sutharsini

முல்லைத்தீவு – அளம்பிலில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தில் மடு மாதாவை வரவேற்கும் ஆயத்தப் பணிகளில் அந்தப் பங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகளை சுத்தம் செய்து அழகுபடுத்தி வரும் அவர்கள் புனித அந்தோனியார் ஆலயத்திலும் அலங்கரிப்பு வேலைகளை முடித்துள்ளனர்.

28.04.2014 அன்றைய நாளில் மடு மாதாவின் வருகையை எதிர்பார்த்து உள்ளதாக அளம்பில் பங்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்காக சீனாவிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை


உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம்

உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயத்திலும் மடு மாதாவை வரவேற்று ஆசிகள் பெறும் பொருட்டு அப்பங்கு மக்கள் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வரவேற்பு வளைவுகளை வைத்து உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம் வரையான வீதியின் இரு பக்கங்களிலும் அழகுபடுத்தி வருகின்றனர்.

சிலாவத்தை அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் பங்கு மக்களும் மடுமாதவை வரவேற்கும் வகையில் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பின்னடைவுகள் இருந்தாலும் விரைவில் முடிவை எட்ட முடியும்: இலங்கை தொடர்பில் ஐ.எம்.எப் நம்பிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள்JOIN NOW

NO COMMENTS

Exit mobile version