Home உலகம் ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம் : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

ரத்தன் டாடா பெயரில் பல்கலைக்கழகம் : மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

0

மறைந்த ரத்தன் டாடாவிற்கு (Ratan Naval Tata) மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர (Maharashtra) மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) தெரிவித்துள்ளார்.

பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் தனது வயது 86 வயதில் அண்மையில் உயிரிழந்தார்.

அரசு அறிவிப்பு

உயிரிழந்த ரத்தன் டாடாவின் பூதவுடல் மும்பையில் (Mumbai) உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த ரத்தன் டாடா

இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version