Home இலங்கை அரசியல் பொறுத்திருந்து பாருங்கள்! அடுத்தது எமது அரசாங்கம் : மகிந்த அறிவிப்பு

பொறுத்திருந்து பாருங்கள்! அடுத்தது எமது அரசாங்கம் : மகிந்த அறிவிப்பு

0

எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) ஆதரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.  எனினும்,  எம்முடன் இணைந்து பயணிக்க அவர் தயார் என்றால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். 

எமது அரசாங்கம்..

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறும் சிறந்த திட்டங்கள் எம்மிடம் உள்ளது. நாங்களே வெற்றிப் பெறுவோம். வேட்பாளர் யார் என்பதை  உரிய நேரத்தில் குறிப்பிடுவோம் தற்போது குறிப்பிட முடியாது.

எந்தளவுக்கு பலமான வேட்பாளரை நாங்கள் களமிறக்குகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அப்போது தெரியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். 

மேலும், அடுத்து அமையப் போகும் அரசாங்கம் எமது அரசாங்கம்தான்.  எங்களோடு இருந்து பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் உரிய நேரத்தில் எம்மிடம் வருவார்கள்  என்றும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version