Home உலகம் பலஸ்தீன ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பலஸ்தீன ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

0

அமெரிக்கா (United States)  சென்றுள்ள பிரதமர் மோடி (Narendra Modi) நியூயார்கில் பலஸ்தீன (Palestine) ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய பிரதமர் நியூயார்கில் (New York) இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடியுள்ளார். 

காசாவின் நிலை

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸைச் (Mahmoud Abbas)  சந்தித்து கலந்துறையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருதரப்புச் சந்திப்பில் பிரதமர் மோடி காசாவின் (Gaza) நிலைகுறித்து ஆழ்ந்த கவலைத் தெரிவித்ததுடன், பலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

காசா – இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version