Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் இளம் தாயின் இழிவான செயற்பாடு: அதிரடியாக கைது!

தமிழர் பகுதியில் இளம் தாயின் இழிவான செயற்பாடு: அதிரடியாக கைது!

0

முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம்
ஒன்றில் தனது மகளின் மார்பினை இளம் தாயார் ஒருவர்  கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 32 அகவையுடைய இரண்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளை கொண்ட தாயாரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைபேசியில் புகைப்படம்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் தனது 13 வயது மகள் வீட்டில்
உறங்கிக்கொண்டிருந்த வேளை சிறுமியின் மார்பக பகுதியினை தனது கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10வயது சிறுமி கண்டு தனது
சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

 நீதிமன்றில் முன்னிலை

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில்
புதுக்குடியிருப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version