Home இலங்கை அரசியல் மொட்டுக்கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

மொட்டுக்கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு

0

 “நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டு
சென்ற எவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு
வழங்கப்படமாட்டாது.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியைக் காட்டிக்கொடுத்த எவரும் மீண்டும்
கட்சிக்கு வரமுடியாது. மக்களுக்கு வேண்டாம் என்றால் சலூன் கதவைப் பூட்டுவதற்குத் தயார் என மகிந்தவும் அறிவித்துவிட்டார்.

வேட்புமனு 

எனவே, அவர்களுக்கு
வேட்புமனு வழங்கப்படமாட்டாது.

மொட்டுக் கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாம் மீண்டெழுவோம் என்ற
நம்பிக்கை உள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version