Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலில் யானையைக் கைவிட்டு சிலிண்டரில் களமிறங்கும் ஐ.தே.க

பொதுத் தேர்தலில் யானையைக் கைவிட்டு சிலிண்டரில் களமிறங்கும் ஐ.தே.க

0

இலங்கை
அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல்
நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர்
பொதுச் சின்னமொன்றின் கீழ் தேர்தலை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அனுமதி

இதன்படி யானை சின்னம்  சிலிண்டராக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான
அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்று ஐ.தே.க. தரப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையில் 1947 ஆம் ஆண்டிலேயே முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
அத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியையும்
பிடித்தது.

1952, 1956, 1960, 1965, 1970, 1977, 1989, 1994, 2000, 2001, 2004 ஆம்
ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி
போட்டியிட்டது.

2010, 2015 பொதுத் தேர்தல்களின்போது கூட்டணி அமைத்து ஐ.தே.க. களமிறங்கி
இருந்தாலும் யானை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவே  கூட்டணிக்குத் தலைமை

2020 பொதுத்
தேர்தலின்போதுகூட யானை சின்னத்திலேயே ஐ.தே.க. தேர்தலுக்கு வந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இம்முறை ‘யானை’ சின்னத்தைக் கைவிட்டு பொதுச்
சின்னத்தில் களமிறங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவே புதிய கூட்டணிக்குத் தலைமை வகிக்கவுள்ளார்.

 

சேவல் சின்னத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இ.தொ.கா., கேஸ்
சின்னத்தில் கூட்டணியாகப் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலித்து வருகின்றது.

1977 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க
போட்டியிட்டுள்ளார். ஆனால், இம்முறை அவர் போட்டியிடமாட்டார். 

NO COMMENTS

Exit mobile version