Home இலங்கை அரசியல் அஞ்சல் மூல வாக்களிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

அஞ்சல் மூல வாக்களிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election commission) தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தினங்கள்

குறித்த மூன்று தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version