Home உலகம் கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : கொலை சந்தேக நபரின் அதிரடி முடிவு

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : கொலை சந்தேக நபரின் அதிரடி முடிவு

0

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 வயதான இலங்கை பிரஜைக்கு ஜாமீன் கோரும் திட்டம் இல்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச்ச மாதம் கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷினி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake (35)) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

கனடாவின் முக்கிய நகரிலிருந்து மக்கள் வெளியேற முயற்சி

அறுவர் படுகொலை

அத்துடன் இலங்கையில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு வந்து, தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையர் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(Gamini Amarakoon Amarakoon Mudiyanselage, 40) என்பவரும் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கை! மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா

அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு 

இந்த படுகொலையை அடுத்து பெப்ரியோ டி சொய்சா கைது செய்யப்பட்டு அவர் காவலில் இருக்கிறார், மேலும் அவரது வழக்கறிஞர் இவான் லிட்டில் தி கனடியன் பிரஸ்ஸிடம் “ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும் திட்டம் தற்போது இல்லை” என்று கூறினார்.

சர்வதேச மாணவராக கனடாவில் கல்வி பயின்று வந்த டி-சொய்சா, அடுத்த வாரம் நீதிமன்றத்திற்கு திரும்பவுள்ளார், அங்கு அவரது வழக்கின் ஆரம்ப விசாரணைக்கான திகதிகளை சட்டத்தரணிகள் நிர்ணயிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version