Home இலங்கை சமூகம் நாட்டில் 1000இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பு

நாட்டில் 1000இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பு

0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மொத்தமாக 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் சுமார் 1000 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகள்

ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 3,000க்கும் மேற்பட்ட வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், 2023 ஆம் ஆண்டில், விபத்துகளில் குறைவாக காணப்பட்டதோடு, 2,214 வீதி விபத்துகளில் 2,321 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

மேலும், 2024 ஜனவரி 01 முதல் ஆகஸ்ட் 10 வரை 1,352 வீதி விபத்துக்களில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version