Home இலங்கை அரசியல் எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

0

தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

குறித்த நடவடிக்கைகள் நேற்றும் (19) இன்றும் (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான வசதிகளை இலகுபடுத்தும் விதமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்

அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல், உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத்தை நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இணையவழி முறை (Online) ஊடாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் வசதியும் இம்முறை வழங்கப்பட்டிருந்தது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளையதினம் (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version