Home ஏனையவை ஆன்மீகம் கதிர்காமத்தை சென்றடைந்த பாதையாத்திரை குழு

கதிர்காமத்தை சென்றடைந்த பாதையாத்திரை குழு

0

அம்பாறை – உகந்தையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்துக்கான பாதையாத்திரிகள் குழுவினர் 5 நாட்கள் காட்டுவழியாக நடந்து நேற்று வெள்ளிக்கிழமை (05)
கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்றடைந்துள்ளனர்.

கதிர்காமகந்தன் ஆலய வருடாந்த கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் தமது
நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு செல்லவுள்ளனர்.

அங்கிருந்து திருகோணமலை ஆலயங்களை தரிசித்து விட்டு அங்கிருந்து வெருகலம்பதி முருகன் ஆலயம் சென்று வாகரை
ஊடாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பயணிக்கவுள்ளனர்.

உகந்தை காட்டுவழி பாதை

அதனைத் தொடர்ந்து, திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், உகந்தை முருகன் ஆலயம், கபிலவத்தை முருகன், வைரவர் ஆலயங்கள், செல்லக்கதிர்காமம் ஆலயம் அகிய கோவில்களுக்கும் செல்லவுள்ளனர்.

இதனடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழி பாதை கடந்த 30ஆம் திகதி
சமயசடங்குகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version