Home இலங்கை அரசியல் ஜனாதிபதி ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்!

ஜனாதிபதி ரணிலை ஏமாற்றிய அரசியல் தலைவர்கள்!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அவர்களின் மட்டக்களப்பு விஜயம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

மாவட்டத்திற்கான விஜயத்தில் முக்கிய இடம் பெற்றிருந்த திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கான விஜயத்தை இரத்துச் செய்தது முதல் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக திறப்பு விழா வரை பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறன.

மீண்டும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவை நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டமை சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் திராய்மடு பகுதியில்

கடந்த யூன் மாதம் 10ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முதளிதரன் அவர்களினால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்ட நிலையில்

அதனை மீண்டும் யூன் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை நாடா வெட்டி அதே மாவட்ட செயலகத்தை திறந்து வைத்தது அரசியலுக்காக ஒரு நாட்டின் ஜனாதிபதியையே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஏமாற்றினாரா? அல்லது ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றினாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே இது போன்ற செயற்பாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அதே சம்பவத்தை நாட்டின் ஜனாதிபதியையே செய்துள்ளமை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்துக்களை புறக்கணித்த ஜனாதிபதி

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் காத்தான்குடி அல் அக்சா பள்ளிக்கு விஜயம் செய்த ரணில் மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை புறக்கணித்தமை இந்துக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மட்டக்களப்பு திருச்செந்தூர் ஆலயத்தில் ஜனாதிபதி வருகையை எதிர்பார்த்து இந்தியாவில் இருந்து வருகைதந்த சமயப் பெரியார்கள் பலர் காத்திருந்த நிலையில் திடிரென திருச்செந்தூர் ஆலயத்திற்கான விஜயத்தை இரத்துச் செய்தது ஏன் என்ற கேள்வி இந்துக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்ற ஜனாதிபதியால் இந்து ஆலயம் ஒன்றிற்கு செல்லமுடியாமல் போனது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 

NO COMMENTS

Exit mobile version