Home இலங்கை அரசியல் கொரியாவில் வேலைவாய்ப்பு : அரசியல்வாதியின் பாரிய பண மோசடி அம்பலம்

கொரியாவில் வேலைவாய்ப்பு : அரசியல்வாதியின் பாரிய பண மோசடி அம்பலம்

0

கொரியாவில் போட்டிப் பரீட்சையின்றி வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் கொரியாவிற்கு அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஊடாக பரீட்சையின்றி கொரியாவில் வேலை தருவதாக கூறும் இந்த இளைஞர்கள், அரசியல்வாதி 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டதாகவும், தலா 1500 ரூபா கட்டணமாக பெற்று பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சி

கொழும்பு மாகொல பிரதேசத்தில் ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியில் அறுபது இளைஞர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயத்துறையில் பரீட்சையின்றி உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல்வாதி கூறியதாகவும் ஒரு மாவட்டத்தில் ஐம்பது வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

தேயிலை இலைகளை பறிப்பது தடுக்கப்படும்

தோட்ட இளைஞர்கள் கொரிய வேலைகளுக்கு புறப்பட்டால் தேயிலை இலைகளை பறிப்பது தடுக்கப்படும் என அரசியல்வாதி இளைஞர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சிக்கு சென்ற ஒவ்வொரு இளைஞனும் இந்த அரசியல்வாதியிடம் காவல்துறை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு இளைஞன் கூட கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பப்படவில்லை என குறித்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/politician-showed-korea-and-collected-3-crores-1713986974

NO COMMENTS

Exit mobile version