Home இலங்கை சமூகம் ஜனாஸாக்களை கையளிப்பது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஜனாஸாக்களை கையளிப்பது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை

0

ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

கடிதத்தில் மேலும், 

“முஸ்லிம் மக்களின் (ஜனாஸாக்களை) இறுதி கிரியை சடங்குகள் ஏனைய மத சடங்குகளை போலன்றி 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மரபு ரீதியான கடமைகள் 

எனினும், பல்வேறு காரணங்களினால் இதனை உரிய காலத்திற்குள் நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை இம்மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இது நல்லாட்சியின் நெறிமுறை பொறுப்புகளுக்கும் முரணானதாகும்.

எனவே, முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் மரபு ரீதியான கடமைகளை எளிதாக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கூடுதல் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version