யாழ். வேலணை பகுதி கடை நடத்துனர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று முற்பகல் வேலணை பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கோரிக்கை
நீண்ட காலமாக தாங்கள் நடத்திய கடைகளை புதிய கட்டட தொகுதியில் தங்களுக்கே வழக்குமாறு கோரி கடை நடத்துனர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
