முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இன்று (22.08.2025), குற்றப் புலனாய்வுத் துறையினரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
