Home இலங்கை சமூகம் முச்சக்கரவண்டியிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

முச்சக்கரவண்டியிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

0

முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரபத்தனை காவல்துறை பிரிவுக்குரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்போல்ட் தோட்டப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (09) இரவு இந்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டி சாரதியின்
தாய், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது பின் பகுதியில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புநிற பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு நிற துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

சிசுவின் சடலத்தை மீட்ட காவல்துறையினர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும் சிசு தொடர்பானமேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 சிசுவின் சடலம்

நுவரெலியா(nuwara eliya) மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

NO COMMENTS

Exit mobile version