தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (04.10.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறுகையில்,
“இதுவரை ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்களிடம் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர். அவர்களால் அரசியல் தீர்வு குறித்து வாயளவில் மாத்திரமே கதைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுக்கின்றது” என்றுள்ளனர்.
மேலும் பேசுகையில்,