Home முக்கியச் செய்திகள் தீப்பற்றி எரிந்து உயிரிழந்த குடும்பம்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தீப்பற்றி எரிந்து உயிரிழந்த குடும்பம்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

0

சிலாபம் – சிங்கபுரவில் உள்ள இல்லத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் தந்தை மகளையும் மனைவியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தீயில் குதித்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அதிகாலை இரண்டு மாடி வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இரட்டை கொலை

இதன் அடிப்படையில் சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் இளங்கரத்ன பண்டா நடத்திய பிரேத பரிசோதனையில் இரண்டு பெண்களும் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், தந்தை தீயில் குதித்து தீக்காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என சிலாபம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்த வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version