Home உலகம் ரஷ்ய தாக்குதலில் சிதைந்த உக்ரைனின் முக்கிய கட்டமைப்பு! இருளில் மூழ்கியுள்ள நகரங்கள்

ரஷ்ய தாக்குதலில் சிதைந்த உக்ரைனின் முக்கிய கட்டமைப்பு! இருளில் மூழ்கியுள்ள நகரங்கள்

0

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

குளிர்காலம் ஆரம்பமான நிலையில், இந்த தாக்குதல்கள் இயற்கை எரிவாயு விநியோகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன.

வசரகால மின்தடை நடவடிக்கை

இதனால், மக்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தும் ஹீட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Image Credit: The Kyiv Independent

மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, சில பகுதிகளில் அவசரகால மின்தடை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஸ்விட்லானா க்ரின்சுக் கூறியுள்ளார்.

உயிரிழப்பு

மேலும், டினிப்ரோ நகரில் உள்ள ஒன்பது அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தாக்குதலில் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

Image Credit: CNN

2022 ஆம் ஆண்டிலிருந்து நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்த நிலையில், இரு நாடுகளும் எரிசக்தி மற்றும் தளவாட அமைப்புகள் மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version