Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி

தமிழ் மக்கள் முன்னிலையில் பிள்ளையானுக்கு எதிராக சஜித் வழங்கிய வாக்குறுதி

0

எனது அரசாட்சியில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய பிள்ளையான் (pillaiyan) போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் (Shanakiyan Rasamanickam)  அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த இரா.சாணக்கியன், பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்ய வேண்டும் என சஜித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அனைத்து கோரிக்கை

இதற்கு பதிலளித்த சஜித், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (Amparai) உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் சாணக்கியன் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sajith-promises-arrest-pillaiyan-for-easter-attack-1726475880

NO COMMENTS

Exit mobile version