Home இலங்கை அரசியல் அரசியலில் ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரும் ரணிலுக்கு ஆதரவு

அரசியலில் ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரும் ரணிலுக்கு ஆதரவு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே(ranil wickremesinghe) இந்த நாட்டின் எதிர்காலத்தை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன (SB Navinna) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணிலின் பணிகளை எவரும் மறந்துவிடக்கூடாது

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நாட்டின் அனைத்து பிரஜைகளும் மறந்துவிடக்கூடாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

மீண்டும் தீவிர அரசியல்

நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக 4 வருடங்களின் பின்னர் தான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்ததாக நாவின்ன குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன(anura piryadharshana yapa) யாப்பாவும் கலந்து கொண்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version