Home இலங்கை அரசியல் வன்னியில் சீலரத்தினதேரர் வேட்பு மனுதாக்கல்!

வன்னியில் சீலரத்தினதேரர் வேட்பு மனுதாக்கல்!

0

வன்னிமாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல்
தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று
தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மதியம்
குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேட்பு மனுதாக்கல்

இதன்போது கட்சியின் தலைவர் சீலரத்தினதேரர் மற்றும் ஆதரவாளர்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில், இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version