Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கூற மறுக்கும் மகிந்த

0

தான் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதி முடிவு 

தனது கட்சியில் இருந்து போட்டியிட பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் தற்போது இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார். 

Source: https://ibctamil.com/article/slpp-presidential-candidate-mahinda-s-opinion-1721738447

NO COMMENTS

Exit mobile version