Home உலகம் விமானத்திலிருந்து திடீரென வந்த புகை : அச்சத்தில் உறைந்த பயணிகள்

விமானத்திலிருந்து திடீரென வந்த புகை : அச்சத்தில் உறைந்த பயணிகள்

0

ஜப்பானில் 200 பயணிகளுடன் பறப்பில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்றிலிருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜப்பான் நாட்டின் ஓல் நிப்பொன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியது.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு!

பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை

இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது. அதில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபின், இறக்கை பகுதியில் இருந்து புகை வந்ததாகவும், என்ஜினை நிறுத்தம் செய்ததும் புகை வந்தது நின்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரியாவில் வேலைவாய்ப்பு : அரசியல்வாதியின் பாரிய பண மோசடி அம்பலம்

ஓயில் கசிவு காரணமாக

ஓயில் கசிவு காரணமாக புகை வந்திருக்கலாம், காக்பிட்டில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பில், ஓயில் அழுத்தம் குறைந்ததை காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version