Home உலகம் வெளிநாடொன்றில் பொழிந்த சிலந்தி மழை…! வைரலாகும் காணொளி

வெளிநாடொன்றில் பொழிந்த சிலந்தி மழை…! வைரலாகும் காணொளி

0

பிரேசில்(Brazil) நாட்டில் சாவ் தோமே தாஸ் லெட்ராஸ் (Sao Thome das Letras) பகுதியில் வானத்தில் இருந்து மழை போல நூற்றுக்கணக்கான சிலந்திகள் விழுந்த காணொளி இணையவாசிகள் அனைவரையும் ஆச்சிரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணொளியை சமூக ஊடகத்தில் பதிவிட்ட நபர், “பிரேசிலில் சிலந்திகள் வானத்தை கைப்பற்றியுள்ளன. இந்தப் பேரழிவு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை கிராமப்புறங்களில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையில் நிகழ்கிறது.

500 வரையிலான சிலந்திகளைக் கொண்ட பெரிய கூட்டம் வானம் முழுவதும் வலைகளைப் பின்னுகின்றன. ஆனால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

சிலந்திகள் மழை

சிலந்திகள் மழை போல விழுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருந்தபோதிலும், வானத்திலிருந்து சிலந்திகள் விழுவது ஒரு இயற்கையான நிகழ்வு என நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இது தொடர்பில் உயிரியலாளர் கெய்ரான் பாசோஸ் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வு ஒரு பெரிய சிலந்தி வலையால் ஏற்பட்டது.

அத்துடன், நூற்றுக்கணக்கான சிலந்திகள் ஒத்திசைக்கப்பட்ட இனச்சேர்க்கை சடங்கில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, சிலந்திகள் தங்கள் சடங்கை முடித்ததும், வலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வானத்திலிருந்து சிலந்திகள் மழையாகப் பொழிவது போன்ற மாயையை உருவாக்கின.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version