Home இலங்கை அரசியல் இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

0

இலங்கை தேசிய புலனாய்வு துறை அதி முக்கிய அறிக்கை ஒன்றை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியுள்ளதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை சஜித் பிரேமதாச வெற்றி பெற முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியமை உண்மையான விடயம் என அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மிகப்பெரிய திருப்பு முனைக்கு ரணில் தயாராகி வருவதாகவும் ஆய்வாளர்
நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறவுள்ள திருப்பு முனைகள் மற்றும் உண்மைகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,

NO COMMENTS

Exit mobile version