Home இலங்கை அரசியல் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த அநுரகுமார

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த அநுரகுமார

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka), பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்(Cardinal Malcolm Ranjith) ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஆசி பெற்றுக்கொண்ட அநுரகுமார

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.  

நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன்
கலந்துரையாடிய அநுரகுமார திஸாநாயக்க, அவர்களிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை
உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியும் இணைந்துகொண்டார். 

Source: https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-1723898405

NO COMMENTS

Exit mobile version