Home இலங்கை பொருளாதாரம் உச்சம் தொடும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

உச்சம் தொடும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

0

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (30.06.2025) அண்ணளவாக 10000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 986,206 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 996,750ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,160 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 281,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 257,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 246,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி எவ்வித மாற்றங்களும் பாதிவாகாமல், 24 கரட் தங்கப் பவுண் 267,000
ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 247,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version