கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி மற்றும் கூட்டத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
ரிஷாத் பதியுதீனும்
அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீனும் கலந்து கொள்ளவில்லை.
இருவருக்கு முக்கியத்துவம்
இதேவேளை அண்மையில் சஜித் தரப்புடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு அம்சமாகும். அவர்களுக்கு முன் இருக்கைகள் கொடுக்கப்பட்டன.
Source: https://ibctamil.com/article/talatha-rajitha-missing-in-sjb-may-day-rally-1714582482
