Home இலங்கை அரசியல் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரித்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு செருப்படி : குருசாமி சுரேந்திரன் சுட்டிக்காட்டு

தென்னிலங்கை வேட்பாளரை ஆதரித்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு செருப்படி : குருசாமி சுரேந்திரன் சுட்டிக்காட்டு

0

தமிழ் மக்களுடைய தேசியம் என்பது தெற்கில் இருக்கக்கூடிய வேட்பாளருக்கு வாக்களித்து தான் நிரூபிக்க வேண்டும் என கூறிய பலருக்கு இந்த ஜனாதிபதி தேர்தல் மூலமாக ஒரு செருப்படி கிடைத்திருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சங்கு எடுத்த வாக்குகளையும் வேட்பாளரையும் விமர்சிப்பது அவர்களது இயலாமையே. 

இன்று தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை கையாள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

வடக்கிலுள்ள மக்கள் எங்களுடைய அரசியல் பிரச்சினை, நீதிப்பொறிமுறை, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை கருத்திற்கொண்டு அந்த மாற்றத்தைக் கையாள்வதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து பலமான கட்டமைப்பாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.“ என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/SYR12OSHh24

NO COMMENTS

Exit mobile version