Home இலங்கை அரசியல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் (Ajit Doval) இலங்கையின் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு, இன்றையதினம் (29.08.2024) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நினைவு சின்னம்

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version