Home முக்கியச் செய்திகள் அதிபர் தேர்தலை முன்னிட்டு ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் ஆரம்பம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் ஆரம்பம்

0

சிறிலங்கா அதிபர் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட
வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை
நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் (30)ஆம் திகதி மாத்தறையில் (Matara ) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டத்திற்கான  ஏற்பாடுகளை அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) முன்னெடுக்கவுள்ளார்.

பிரசாரம் ஆரம்பம்

குறித்த பிரசாரத்தை நாளையதினம் (16) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ள நிலைமையால் (30) ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, ஏனைய மாவட்டங்களிலும் அரசின் வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரசாரங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version