Home இலங்கை அரசியல் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya)  மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முக்கிய தீர்மானங்கள்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்படவுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பொது பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு, சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாண மற்றும் புத்த சாசனத்தின் செய்தித் தொடர்பாளராக மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, புதிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் நாளைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version