Home முக்கியச் செய்திகள் கொட்டி தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (Kandy) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்டுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

பதுளை, அம்பாறை (Ampara) மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version