Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சியில் 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில்
காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக
கூறப்படுகிறது.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18
வயதுடைய இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/tragedy-befell-an-18-year-old-youth-in-kilinochchi-1719187664

NO COMMENTS

Exit mobile version