செம்மணி போராட்ட களத்தில் சாணக்கியன் மற்றும் சீ.வி.கே ஆகியோருக்கு எதிராக கதைத்தவர்கள் தமிழரசு கட்சியை சேர்ந்த கும்பல் என பிரித்தானிய ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் இடம்பெற்றது.
மக்கள் சில காரணங்களுக்காக தமிழ் அரசியல்வாதிகள் சிலரை அந்த போராட்டத்தில் அனுமதிக்கவில்லை.
இதற்கு முக்கிய கரணம் அவர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்த ஐ.நா ஆணையாளரிடம் எவ்வாறு நீதி கேற்பார்கள் என மக்களுக்கு தெரியும்.”என்று கூறினார்.
