Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி

அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி

0

அரச ஊழியர்களுக்கு, குறிப்பாக கள அலுவலர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு
வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் காலத்தில் இது முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள்

பாதிக்கப்பட்ட கிராம சேவைப் பிரிவுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தல்,
ஆறு மாதங்களுக்கு வணிகங்களுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்கள் மற்றும்
குத்தகைச் சலுகைகளை வழங்குதல், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டைத்
தீர்மானித்தல் என்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அத்துடன், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச
இழப்பீட்டு வரம்புகளை நிர்ணயித்தல், சேதமடைந்த வீட்டுச் சுவர்களை மீண்டும்
கட்டியெழுப்புவதற்கு சதுர அடிக்கு ஏற்ப நிதி உதவி வழங்குதல் மற்றும் பயிர்
சேதத்திற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் அவர்
முன்வைத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version