அமெரிக்காவில் வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடா்பான அனைத்து முடிவுகளையும் நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக, அமெரிக்க படையினா் ஆப்கானிஸ்தானில் இருந்த போது அவா்களுக்கு உதவிய ஆப்கானியா்களுக்கு நுழைவு விசா வழங்குவதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க குடியேற்ற சேவை இயக்குநா் கருத்து தெரிவித்துள்ளார்.
முழுமையாக சோதனை
மேலும் தெரிவித்த அவர், ஒவ்வொரு குடியேற்ற விண்ணப்பதாரரையும் முழுமையாக சோதனை செய்யும் வரை அவா்களுக்கு அடைக்கலம் அளிக்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பதை நிறுத்திவைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மூன்றாம் உலக நாடுகளை சோ்ந்தவா்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
