Home முக்கியச் செய்திகள் ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

0

ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம்(10) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் கருதப்படுகிறார்.

அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை

இவரது விஜயமானது வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காளியான இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் வலுவான அர்ப்பணிப்பை இந்த விஜயம் வலியுறுத்துவதாக அந்த தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version