Home இலங்கை அரசியல் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் விஜயதாச ராஜபக்ச : ஆசீர்வாதம் வழங்கிய மகாசங்கத்தினர்

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் விஜயதாச ராஜபக்ச : ஆசீர்வாதம் வழங்கிய மகாசங்கத்தினர்

0

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச (Vijayadasa Rajapaksa) வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (14.8.2024) காலை வேட்புமனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ச,

”அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version