Home இலங்கை அரசியல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! விஜேதாச ராஜபக்‌ச அறிவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! விஜேதாச ராஜபக்‌ச அறிவிப்பு

0

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்‌ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டார்.

இந்நிலையில் எதி்ர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணி

அத்துடன், தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (ஜாதிக பிரஜாதந்திரவாதி பெரமுண) பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அதன் உபதலைவர் கோமிக யஸஸ் விஜேசிர அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version