Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

0

வவுனியா(Vavuniya) – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று(21.02.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியிக்கு திரும்ப முற்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம்

இதன்போது, நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version