Home உலகம் அடங்க மறுக்கும் இஸ்ரேல்! லெபனானில் வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்! லெபனானில் வான்வழித் தாக்குதல் – 13 பேர் பலி

0

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, லெபனானை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவென்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு காரணம்

சிடன் நகரில் அமைந்துள்ள எயின் எல்-ஹில்வே அகதிகள் முகாமில் நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலால் பலர் காயமடைந்துள்ளனர்.

Image Credit: The New York Times

ஹமாஸ் இயக்கம் அப்பகுதியில் பயிற்சி முகாமை நடத்தி வந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி வந்த நிலையிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் மறுப்பு

அதன்போது, உலகின் எங்கு செயல்பட்டாலும் ஹமாஸ் அமைப்பை இலக்காகக் கொள்ளும் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: NPR

எவ்வாறாயினும், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சிடனில் எந்தவொரு பயிற்சி முகாமும் செயல்படவில்லை என்றும், தாக்குதல் உண்மையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தைத் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version