முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதி மறுக்கப்படுவதே சமூக பதற்றத்துக்கான காரணம் : விஜயதாச ராஜபக்ச


Courtesy: Sivaa Mayuri

சமூக நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் நீதியின் முக்கிய பங்கை இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நீதியை மறுப்பதால் ஏற்படும் விளைவுகளையும், சரியான நேரத்தில் சட்ட நடைமுறைகளின் அவசரத் தேவையையும் எடுத்துரைத்துள்ளார்.

நீதி மறுக்கப்படுவதால், அனைத்து மூலைகளிலிருந்தும் அமைதியின்மை தவிர்க்க முடியாமல் பின்தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட செயல்முறைகள் 

அமைதியின்மை எதிர்பாராத வழிகளில் வெளிப்பட்டு, சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில்,2022 இல் இலங்கையின் போராட்டங்கள், தாமதமான நீதி எவ்வாறு பதற்றங்களை அதிகரிக்கலாம் மற்றும் அமைதியை அச்சுறுத்தும் என்பதற்கு தெளிவான உதாரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி மறுக்கப்படுவதே சமூக பதற்றத்துக்கான காரணம் : விஜயதாச ராஜபக்ச | Denial Of Justice Is The Cause Of Social Unrest

சட்ட செயல்முறைகள் தடைப்படும் போது அல்லது நீதி தாமதமாகும்போது குழப்பம் ஏற்படலாம்.

இத்தகைய சீர்குலைவுகளைத் தடுக்க, சட்டத்தின் ஆட்சியை அசைக்காமல் நிலைநிறுத்த வேண்டும்.
அத்துடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் நீதி வெல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதி மறுக்கப்படுவதே சமூக பதற்றத்துக்கான காரணம் : விஜயதாச ராஜபக்ச | Denial Of Justice Is The Cause Of Social Unrest

லீ குவான் யூ மற்றும் மகாதீர் முகமது ஆகியோரை உதாரணம் காட்டிய அமைச்சர், மக்கள் நம்பிக்கைக்கு மாறாக, இந்த தலைவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை தனித்தனியாக உருவாக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, குடிமக்களின் கூட்டு முயற்சிகளே முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் வழிவகுத்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.