மத்திய பாகிஸ்தானில் (central Pakistan) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மலைப்பாங்கான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பர்கானின் வடகிழக்கில் 60 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக USGS தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்த தகவல்
இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை 2015 இல், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 400 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

