பூநகரி பிரதேச சபையின் வெற்றிகரமான மக்கள் சேவை பாதையில் கெளதாரிமுனை முதல் பள்ளிக்குடா வரையிலான சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடற்கரை பொலித்தீன்கள் அற்ற பகுதியாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல் துறையினர், பாடசாலை மாணவர்கள் என அனைவரது பங்களிப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
துப்புரவு பணியில் புதையுண்ட வாகனமொன்றை மீட்பதில் முப்படையினர், பொதுமக்களுடன் பிரதேச சபை பணியாளர்களும் ஈடுபட்டனர்.

