இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அண்மைக்கால அறிக்கையின்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் கையிருப்பில் 2.017% (133 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6,458 மில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலவியமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுச் செலாவணியுடன் சேர்த்து, நாட்டின் தங்கக் கையிருப்பிலும் சிறிதளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 191 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தங்கக் கையிருப்பு, ஜூலை மாதத்தில் 1 மில்லியன் டொலரால் அதிகரித்து 192 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

