எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (19.10.2024) நா.சேனாதிராஜா தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சி
இந்நிகழ்வில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வு ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சாந்தி சிறிஸ்கந்தராஜா (Shanti Siriskandaraja), முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, மற்றும்
கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் வன்னி மாவட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை
உறுப்பினர் து. ரவிகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா.
திருமகன், சமூக செயற்பாட்டாளர் தே. சிவானந்தராசா, ஆசிரியர் பா. கலைதேவன்,
விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.
கமலேஸ்வரன் சட்டத்தரணி செ. டினேசன், சட்டத்துறை மாணவி அ. கலீபா ஹலிஸ்ரா ஆகியோர்
போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
Source: https://ibctamil.com/article/candidate-introductory-event-of-itak-1729335666

